உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு !.

சென்னை 21 மே 2022 உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு !.

உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும்
என் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்றும் சில உருக்கு மூலப் பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Posts