நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு!
சென்னை 04 டிசம்பர் 2024 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 1.10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கதாநாயகி சாய் பல்லவியின் மொபைல் எண் என தனது எண்ணை காண்பித்ததால், பலர் அதில் தொடர்பு கொண்டதால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் வாகீசன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

